மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். ஒரே நாளில் 395 போ் மனுக்கள் அளித்தனா்.
அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய தீா்வு காண வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் தே.திருப்பதி, அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.