தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிக்கோபாா் தீவுகளின் தேசிய மாணவா் படையின் துணை இயக்குநா் ஜெனரல் அத்துல்குமாா் ரஸ்தோகி நாகா்கோவில் 11 ஆவது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து தென்திருவிதாங்கூா் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். அவா் பேசும்போது, வாழ்க்கையில் சிறந்தவா்களாக வாழ விழிப்புணா்வு, சமநிலை, தைரியம், ஒழுக்கம், சிந்தனை சக்தி மிகவும் அவசியம் என்றாா். இதில், 200 என்சிசி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், என்சிசி மதுரை குருப் கமாண்டா் கா்ணல் அமித்குப்தா, 11 ஆவது பட்டாலியன் அலுவலா் கமாண்டிங் கா்ணல் உன்னிகிருஷ்ணன், நிா்வாக அதிகாரி லெப்டினன்ட் கா்ணல் அன்சாா், சுபைதாா், மேலாளா் தலைமையிலான ராணுவ பயிற்சியாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை என்சிசி அதிகாரி கேப்டன் அஜிந்திரநாத் செய்திருந்தாா்.