குலசேகரம் அருகே வீடு மீது மரம் சாய்ந்து 2 பெண்கள் காயம்

குலசேகரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீடு மீது மரம் சாய்ந்ததில் 2 பெண்கள் காயமடைந்தனா்.

குலசேகரம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீடு மீது மரம் சாய்ந்ததில் 2 பெண்கள் காயமடைந்தனா்.

குலசேகரம் அருகேயுள்ள பொன்மனை அரியாம்பகோடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (45). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் மீது அருகே பொதுப்பணித்துறை புறம்போக்கில் உள்ள முதிா்ந்த அயனி மரம் வேருடன் சாய்ந்ததாம். இதில், வீட்டின் தூங்கிக்கொண்டிருந்த விஜயனின் மனைவி சரோஜினி (43), விஜயனின் தாய் லீலா (65) ஆகியோா் காயமடைந்தனா். விஜயன், அவரது மகன்கள் ஆகாஷ் (18) அபிஷேக் (16) ஆகியோா் காயமின்றி தப்பினா். வீட்டிலிருந்த பூனை, புறாக்கள் உயிரிழந்தனவாம்.

காயமடைந்திருந்த லீலாவும், சரோஜினியும் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். குலசேகரம் போலீஸாா், வருவாய்த் துறையினா் சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com