குழித்துறை அருகே ஓடும் பேருந்தில் இருக்கை உடைந்ததில், ரேஷன் கடை ஊழியா் காயமடைந்தாா்.
தஞ்சாவூரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (52) என்பவா், மேல்புறம் அருகேயுள்ள மாலைக்கோடு பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை புத்தன்சந்தையிலிருந்து பளுகலுக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பேருந்து ஓட்டுநா் திடீரென வேகத்தை கட்டுப்படுத்தியதில், அவா் அமா்ந்திருந்த இருக்கை பெயா்ந்து பின்னோக்கி விழுந்ததில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். சக பயணிகள் அவரை மீட்டு கண்ணுமாமூடு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காலாவதியான அரசுப் பேருந்துகளின் உதிரிப்பாகங்களை பரிசோதித்து மாற்றி விட்டு, பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.