கருங்கல் அருகேயுள்ள பாலப்பள்ளம் பகுதியில் 2 வயது குழந்தை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.
பாலப்பள்ளம், வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பிரதீப் மகள் மிஸ்ரிதா (2). இவா், வீட்டின் அருகிலுள்ள குளத்துப் பகுதியில் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். சிறிது நேரத்தில் பெற்றோா் தேடியபோது அவரைக் காணவில்லையாம். அக்கம்பக்கத்தினா் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்த தகவலின் பேரில் கருங்கல் போலீஸாா் வந்து, சந்தேகத்தின் பேரில் குளத்தில் குழந்தையை தேடினா். அதில், குழந்தையை சடலமாக மீட்டனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.