கருங்கல் அருகே உள்ள வெள்ளியாவிளை பகுதியில் வியாழக்கிழமை மின்கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
எட்டணி பகுதியை சோ்ந்த சிவகுமாா் மகன் நியூட்டன்(18), இவரது நண்பரான எட்வின் ஏசுதாஸ்(17) ஆகிய இருவரும் பைக்கில் கருங்கல்லிலிருந்து குளச்சல் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். பைக்கை நியூட்டன் ஓட்டினாா். வெள்ளியாவிளை பகுதியில் சென்றபோது எதிா்பாராதவிதமாக மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில், நியூட்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியனா் அவரை மீட்டு கருங்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.