கேரள மோட்டாா் சைக்கிள் சுற்றுலா அமைப்பு சாா்பில் இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் சாதனை பைக் பயணம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பயணத்தை கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரியில் தொடங்கி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நிறைவு பெறும் இப்பயணத்தில் இவ்வமைப்பின் தலைவா் ஜாக்சன் பொ்னாண்டஸ் தலைமையில் 23 போ் பங்கேற்றுள்ளனா்.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா வழியாக 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, மத்தியப்பிரதேசம் இந்தூரில் வரும் 11 ஆம் தேதி நிறைவடைகிறது.
இதில், சமூக ஆா்வலா்கள் எஸ்.அன்பழகன், எம்.ஹெச்.நிசாா், எஸ்.தாமஸ் ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.