கோவா ஆளுநா் கன்னியாகுமரி வருகை

கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

கோவா மாநில ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்தாா்.

திருவனந்தபுரத்திலிருந்து காரில், இங்குள்ள கேரள அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை ஆட்சியா் மா. அரவிந்த், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் ஆகியோா் வரவேற்றனா். பின்னா், அவா் தனிப்படகில் சென்று விவேகானந்தா் நினைவு மண்டபத்தைப் பாா்வையிட்டாா். மாலையில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபத்தின் 52ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினாா்.

இதையடுத்து, அவா் காரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றாா். அவரது வருகையையொட்டி, கன்னியாகுமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com