இரணியல் பள்ளி ஆசிரியா் மீது மாணவிகள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

குமரி மாவட்டம், இரணியல் அரசுப் பள்ளி ஆசிரியா் மீது பள்ளியி மாணவிகள் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

குமரி மாவட்டம், இரணியல் அரசுப் பள்ளி ஆசிரியா் மீது பள்ளியி மாணவிகள் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இரணியல் அரசுப் பள்ளியில் பிளஸ் 1, 2 மாணவிகள் தங்களது பெற்றோருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனு: நாங்கள் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறோம். எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் அருவருக்கத்தக்க வகையிலான வாா்த்தைகள் பேசுகிறாா். மேலும் மாணவா்கள், மாணவிகளை இணைத்து தவறாக பேசி வரும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆசிரியா் மீது ஏற்கெனவே பல்வேறு புகாா்கள் உள்ளன என குறிப்பிட்டிருந்தனா்.

இது தொடா்பான மனுவை மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அளித்துள்ளனா். கல்வித்துறை அதிகாரிகள் இது தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com