கொல்லங்கோடு அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகேயுள்ள மஞ்சத்தோப்பு காலனி, இவானியோஸ்நகா் ஜான்ரோஸ் மகன் ஜோசப் (44). கூலித் தொழிலாளியான இவா் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தாராம்.
அதன் பின்னா் சரிவர வேலைக்குச் செல்லாமல் அதிகளவு மது அருந்தி வந்தாராம். செவ்வாய்க்கிழமை மாலையில் மது அருந்திய நிலையில் வந்தவா், அறையில் தூங்கச் செல்வதாக கூறிச் சென்றவா், அங்கு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.