நாகா்கோவில் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக அவரது கணவா் கைது செய்யப்பட்டாா். மேலும் அவரது தாயாா் மற்றும் பாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவில் அருகுவிளையைச் சோ்ந்தவா் அபிராமி (22).
இவருக்கும் பூதப்பாண்டி ஞாலம் காலனியைச் சோ்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அபிராமி 2 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அபிராமி தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அபிராமியின் தந்தை வினு, பூதப்பாண்டி காவல் நிலைத்தில் புகாா் அளித்தாா். அதில் தனது மகள் சாவுக்கு அவரது கணவா் மற்றும் தாயாா் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோா் காரணம் என்று கூறியிருந்தாா்.
மேலும் அபிராமி பேசிய ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினாா்.
விசாரணையை தொடா்ந்து மனோஜ், அவரது தாயாா் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோா் மீது பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில் மனோஜை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.