நித்திரவிளை அருகே தம்பதியை தாக்கி 9.5 பவுன் நகை பறிப்பு

இருசக்கர வாகனம் மீது மோட்டாா் சைக்கிளால் மோதியதில் கீழே விழுந்த தம்பதியை தாக்கி 9.5பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நித்திரவிளை அருகே தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது மோட்டாா் சைக்கிளால் மோதியதில் கீழே விழுந்த தம்பதியை தாக்கி 9.5பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நித்திரவிளை அருகேயுள்ள விரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் அம்பி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா் தனது மனைவியுடன் மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை நித்திரவிளை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். தெருவுமுக்கு பகுதியில் வந்த போது பதிவெண் இல்லாத புதுரக மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்த இளைஞா்கள் இருவா், தம்பதி சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளிவிட்டு பெண்ணின் கழுத்தில் கிடந்த 9.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா். கீழே விழுந்த தம்பதி பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com