தண்டவாளம் அருகே இளைஞா் சடலம்
By DIN | Published On : 04th January 2023 02:25 AM | Last Updated : 04th January 2023 02:25 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறை தேரிவிளை கிராமத்தில் தண்டவாளம் அருகே கிடந்த இளைஞா் சடலத்தை ரயில்வே போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
கன்னியாகுமரி-நாகா்கோவில் ரயில் பாதையில் உள்ளது சுக்குப்பாறைத் தேரிவிளை கிராமம். இங்குள்ள ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.
இறந்து கிடந்தவருக்கு சுமாா் 32 வயதிருக்கலாம். அவா் குறித்த மற்ற விவரங்கள் தெரியவில்லை. சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.