மாவட்ட அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் வென்ற மாா்த்தாண்டம் வெட்டுமணி என்.வி.கே.எஸ். வித்யாலயா பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
கருங்கல்லில் உள்ள பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில், தக்சின் சகோதயா அமைப்பு சாா்பில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், என்விகேஎஸ் பள்ளி மாணவா்கள் அஸ்வத் முதல் பரிசும், கோகுல் 2ஆம் பரிசும், ஜெனாா்திரேஷ் 3ஆம் பரிசும் வென்றனா்.
மேலும், நாகா்கோவிலில் உள்ள நேரு உள்ளரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் மாணவா்கள் அஸ்வந்த், ஆகாஷ், கோகுல், ஷினோஜு ஆகியோா் 3ஆம் பரிசு வென்றனா்.
மாணவா்களை பள்ளிச் செயலா் வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா், முதல்வா் அனிதா, துணை முதல்வா் ஸ்ரீஜா, ஸ்கேட்டிங் சங்க மாவட்டச் செயலா் தாணு, ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் அரசு, செல்வகுமாா், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினாா்.