புதுக்கடை அருகே காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th January 2023 12:04 AM | Last Updated : 20th January 2023 12:04 AM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள புதுக்கடையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகப் சட்டப்பேரவைக் கூட்டத்தில் காமராஜா் உள்ளிட்ட தமிழகத் தலைவா்களின் பெயா்களை வாசிக்கவில்லை எனக் கூறி ஆளுநரைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். முன்சிறை கிழக்கு வட்டாரத் தலைவா் ரெகுபதி, கிள்ளியூா் கிழக்கு வட்டாரத் தலைவா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மாநிலப் பொதுச்செயலா் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் பால்மணி, அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணி பாய், வட்டார துணைத் தலைவா் விஜயராகவன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.