குமரி மாவட்டம், குழித்துறை, இரணியலில் ரயில் மோதி 2 போ் பலியானாா்கள்.
மாா்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (41). கட்டடத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு குழித்துறை ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆய்வாளா்கள் விஜயகுமாா், பழனி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் பால்ராஜ் சடலத்தை மீட்டு பரி சோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
பால்ராஜ் ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கல்குளம் காயக்கரை பகுதியை சோ்ந்தவா் பிரபு (33). லாரி ஓட்டுநா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு இரணியல் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தாா்.
இது குறித்த தகவலின் பேரில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். பிரபுவின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.