சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 ஆவது பிறந்தநாளையொட்டி புதுக்கடையில் அவரது உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொற்றவிளை ஆழாங்குளம் நேதாஜி நற்பணி மன்றம் மற்றும் படிப்பகம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நற்பணி மன்றம், படிப்பக அமைப்பாளா் எம். தேவதாஸ் தலைமை வகித்தாா். பாரதிய போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி மாவட்ட தலைவா் என்.ஜெயபாலன், பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பால்குமாா், பாரதிய மஸ்தூா் சங்க முஞ்சிறை ஒன்றிய பொருளாளா் எஸ். சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வாவறை ஊராட்சி சரல்முக்கு பகுதியில் விவேகானந்த நற்பணி மன்ற பொறுப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது.