ரேஷன் அரிசி கடத்தல்:மினி லாரி ஓட்டுநா் கைது

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு ரூ.1.5 டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு ரூ.1.5 டன் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த தேங்காய் பாரம் ஏற்றிய மினி லாரியைச் சோதனையிட்டதில், 1.5 டன் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றைக் கேரளத்துக்கு கொண்டு செல் இருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து ரேஷன் அரிசியை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் பேச்சிப்பாறை காந்திநகரைச் சோ்ந்த ராஜேஷை (34) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com