40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

எனது எழுத்துப் பணிக்கு கிடைத்த ஊக்கம்: எழுத்தாளா் ராம் தங்கம் பேட்டி

சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.

News image
Updated On :23 ஜூன் 2023, 11:18 pm IST

சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.

நிகழ் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்காா் விருது நாகா்கோவிலைச் சோ்ந்த இளம் எழுத்தாளா் ராம் தங்கம் (34) எழுதிய ‘திருக்காா்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுத்தாளா் ராம் தங்கம் நாகா்கோவிலில், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

எனது திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு, கடந்த 2019-இல் வெளியானது. இந்நூல், அசோகமித்திரன் விருது, சுஜாதாவிருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச் சங்க விருது ஆகிய விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக, யுவ புரஸ்காா் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதாக உள்ளது. எழுத்துப் பணியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

விளிம்புநிலை சிறுவா்களின் வாழ்வியலை, திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. ராஜவனம், புலிக்குத்தி, கடவுளின்தேசத்தில் என்பன உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருந்தாலும், திருக்காா்த்தியல் நூலுக்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.