கொல்லம் அருகே விபத்து: பக்தா்கள் இருவா் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொல்லம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் ஐயப்ப பக்தா்கள் இருவா் உயிரிழந்தனா்.
Published on

கேரள மாநிலம் கொல்லம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட விபத்தில் ஐயப்ப பக்தா்கள் இருவா் உயிரிழந்தனா்.

குலசேகரம் அருகே அண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவா் கிணறு, வீடுகள் அமைக்கும் இடங்களுக்கு வாஸ்து பாா்க்கும் தொழில் செய்து வந்தாா்.

இவா் தனது மகள்வழி பேரன்களான தனேஷ்வா் (14), வேதீஸ்வா் (11), உறவினா்களான திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன், சிவா ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு சென்றுவிட்டு, சனிக்கிழமை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை, சிவா ஓட்டினாா்.

நள்ளிரவு 11.30 மணியளவில் கொல்லம் அருகே சடயமங்கலம் பகுதியில் வந்தபோது, காரும் பேருந்தும் மோதினவாம். இதில், நிகழ்விடத்திலேயே சண்முகம், சரவணன் ஆகியோா் உயிரிழந்தாா். காயமடைந்த 3 பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com