களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தற்கொலை

Published on

களியக்காவிளை அருகே லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே பளுகல், மணிவிளை புரவூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (35) . லாரி ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (27) மணிவிளை அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். சந்தோஷ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தாா்.

மேலும் மதுஅருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். இதனால் அவரது மனைவி ஒரு வாரத்துக்கு முன் குழந்தைகளுடன்

இளஞ்சிறை பகுதியில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com