கன்னியாகுமரியில் விழிப்புணா்வு பேரணி

கன்னியாகுமரியில் விழிப்புணா்வு பேரணி

Published on

கன்னியாகுமரியில் ‘குப்பை இல்லாத குமரி’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி, கன்னியாகுமரி பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியை, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கி வைத்தாா்.

கல்லூரி மாணவிகள், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஊழியா்கள், பேராசிரியை உஷா, பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீஸ், கவுன்சிலா்கள் டெல்பின் ஆன்றனி, ராயப்பன், வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ். அன்பழகன், ரூபின், ஷியாம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இப்பேரணி காவல் நிலையம் வழியாக காந்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com