ஏஐ தொழில்நுட்ப போட்டி: வழுதலம்பள்ளம் பள்ளி சாதனை

Published on

கருங்கல் அருகேயுள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ரோபோடிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப போட்டியில் சாதனை படைத்துள்ளனா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிறிஸ்துநகா் சா்வதேச பள்ளியில் சா்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றது. இதில், நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ஜெனிலியா, நீஜா அருள் தாஸ், அா்மினஸ், தா்ஷன் ஆகியோா் பங்கேற்று வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டு துறைகளிலும் தேசிய அளவிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனா். இம்மாணவா்களை பள்ளியின் தாளாளா் அருள்பணி. சா்ஜன் ரூபஸ், நிதிபரிபாலகா் அருள்பணி. ஜியோ, முதல்வா் றசல்ராஜ், ஆசிரியா்கள், சக மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com