ஜடாதீஸ்வரா் கோயிலில் திருப்பணிகளைத் தொடக்கிவைத்த பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.
கன்னியாகுமரி
திருப்பதிசாரம் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் அருள்மிகு ஜடாதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 18 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, பணிகளைத் தொடக்கிவைத்தாா். அறநிலையத் துறைப் பொறியாளா் ரமேஷ், ஸ்ரீகாரியம் சோ்மராஜா, திமுக நிா்வாகிகள் காந்தி, கண்ணன், இம்மானுவேல், முத்துலட்சுமி, காளியப்பன், பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, பீமநகரி அருள்மிகு எதிரவள்ளிச் சோழ விநாயகா் கோயிலில் ரூ. 22 லட்சத்திலும்,திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழிமாா்பன் கோயிலில் ரூ. 27 லட்சத்திலும் திருக்குளம் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.