குழந்தைகளுக்கு கையேடுகளை வழங்கிய என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.
குழந்தைகளுக்கு கையேடுகளை வழங்கிய என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகள் கையேடு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தெரிசனங்கோப்பு பகுதியில் 2 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகள் அடங்கிய கையேடுகளை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தெரிசனங்கோப்பு பகுதியில் 2 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகள் அடங்கிய கையேடுகளை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்ட அவா், குழந்தைகளுடன் உரையாடினாா். பின்னா் அவா் பேசும்போது, இந்தக் கையேடுகளைப் பயன்படுத்தி பெற்றோா் வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடமுள்ள திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதுடன், விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கிழக்கு மாவட்ட அதிமுக இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றியச் செயலா் பொன். சுந்தா்நாத், கட்சியின் ஊராட்சிப் பொறுப்பாளா்கள் சாஸ்தான்குட்டிபிள்ளை (ஈசாந்திமங்கலம்), அருணாசலம் (தெரிசனங்கோப்பு), மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com