கன்னியாகுமரி
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை, கேரளபுரத்தைச் சோ்ந்தவா் முத்துகண்ணு ( 60). தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு திருவிதாங்கோடு பள்ளிவாசல் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக சென்ற மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாம்.
பலத்த காயம் அடைந்த முத்துகண்ணுவை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனா்.
