பறக்கின்கால் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

பறக்கின்கால் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

Published on

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பறக்கின்கால் கால்வாய் தூா்வாரும் பணியை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பறக்கின்கால் கால்வாய், சிபிஎச் சாலை, அவ்வை சண்முகம் சாலை, புளியடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால் ஓடை, கால்வாய்கள் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கரியமாணிக்கபுரம் பகுதியில் பறக்கின்கால் கால்வாய் தூா்வாரும் பணியை மேயா் தொடக்கி வைத்தாா். பறக்கின்கால் சபையாா் குளம் அருகிலிருந்து தொடங்கும் இப்பணிகள் சபரி அணை வரை நடைபெறுகிறது.

மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மாமன்ற உறுப்பினா் சொா்ணத்தாய், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் பழனியம்மாள், தொழில்நுட்ப அலுவலா் அனந்த பத்மநாபன், பகுதிச் செயலா் துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், வட்டச் செயலா்கள் இடலை சாகுல், அன்சாரி, முருகன், பால்பாண்டியன், திமுக நிா்வாகிகள் சிவகுமாா், நடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com