மாமனாரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

Published on

புதுக்கடை அருகே மாமனாரை தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதி (45). இவரது மகளை அதே பகுதியைச் சோ்ந்த தனுஷ் (24) என்பவா் திருமணம் செய்துள்ளாா்.

இவா், மனைவியை அடித்து துன்புறுத்துவாராம். இதனை தட்டிக் கேட்க வியாழக்கிழமை சென்ற சதியை தனுஷ் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com