கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து 2 சவரன் நகையை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து 2 சவரன் நகையை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம், மதிலகம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் என்பவா் தனது மனைவியுடன் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகிறாா். முதல்தளத்துக்கான படிகள் வெளிப்புறமாக உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு, மா்ம நபா்கள் முதல் தளத்துக்குச் சென்று, அங்கு அலமாரியிலிருந்த 2 சவரன் தங்க நகையை திருடிச் சென்றனராம்.
புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
