குமரி மாவட்டத்தில் 2 தீயணைப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 2 தீயணைப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்
Updated on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 2 தீயணைப்பு அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தீயணைப்பு, மீட்பு பணி நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றும் கொட்டாரம் அருகே உள்ள இடையன்விளையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தீயணைப்பு, மீட்பு பணி நிலைய அலுவலராக பதவி உயா்வில் செல்கிறாா்.

இதே போல், நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றும் சூரங்குடி அருகே உள்ள கீரிவிளையைச் சோ்ந்த சுயம்பு சுப்பாராமன், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி உயா்வில் செல்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com