கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகைகள் திருட்டு
கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ஒற்றையால்விளையைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மனைவி அனுத்ராதேவி (28), தனது 36 பவுன் தங்க நகைகளை வீட்டில் வைத்துவிட்டு, தாய் வீட்டுக்குச் சென்றிருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து நகைகளைத் திருடிச் சென்ாகத் தெரியவந்ததாம்.
புகாரின்பேரில், கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகிறாா்.
