கருங்கல் அருகே 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குறும்பனை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கருங்கல் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, 20 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனா். மேலும், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com