குமரி அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

கன்னியாகுமரி அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
Published on

கன்னியாகுமரி அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (47). இவா் சொந்தமாக மினி டெம்போ வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரு நாள்களுக்கு முன்னா் கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா நோக்கிச் சென்றபோது, சைக்கிளில் ஒருவா் குறுக்கே வந்தாா். அப்போது முத்துக்குமாா் திடீரென பிரேக் பிடித்ததில், நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தாா். இவரை பொதுமக்கள் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. அதன்பின்னா் பஞ்சலிங்கபுரத்தில் உள்ள அவரது உறவினா்களிடம் புதன்கிழமை இரவு உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com