பளுகல் கூட்டுறவு கடன் சங்க கட்டடப் பணி தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் கூட்டுறவு கடன் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
பழுதடைந்து காணப்பட்ட அக்கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியியை வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினா் ரத்தினகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜோதிஷ்குமாா், மாநில பொதுச்செயலாளா் ஆஸ்கா்பிரடி, மேல்புறம் வட்டாரத் தலைவா் ரவிசங்கா், கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் மது, பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பிஜு(பளுகல் ), மோகன்தாஸ் (பாகோடு), பளுகல் பேரூா் காங்கிரஸ் தலைவா் டென்னிசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளா் விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

