தலைமறைவான 2 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Published on

குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்பாக நீண்ட நாள்களாக ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள 2 இளைஞா்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை , சிறியவண்ணான்விளை பகுதியைச் சோ்ந்த ரீகன்(27), கேரள மாநிலம் கைத்தோடு பகுதியைச் சோ்ந்த ஷபீக்(35) ஆகிய இருவா் மீதும் புதுக்கடை காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

வழக்கு தொடா்பாக நீண்ட நாள்களாக குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2 பேரும் தலைமறைவாக உள்ளனராம். இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்ய போலீஸாருக்கு குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com