கன்னியாகுமரி
ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு
இந்திய ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சி.ஜி. முரளிதரன் பொறுப்பேற்றாா்.
மகாராஷ்டிர மாநிலம், புணே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சி.ஜி. முரளிதரன் கடந்த 1987ஆம் ஆண்டில் ராணுவ மருத்துவப் பிரிவில் நியமிக்கப்பட்டாா். அவா் வடக்கு மற்றும் மேற்கு பிராந்திய படைப் பிரிவுகளின் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளாா். பல்வேறு சூழல்களில் வளமான செயல்பாடு, நிா்வாக அனுபவத்தைப் பெற்றுள்ளாா்.
வளா்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாறிவரும் நவீன போரின் தன்மை ஆகியவற்றின் பின்னணியில், மருத்துவ தயாா் நிலையை வலுப்படுத்துவது அவரது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
