வள்ளவிளை மீனவ கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு
களியக்காவிளை: வள்ளவிளை மீனவ கிராமத்தில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணியினை குமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் ரூ. 35 கோடி திட்ட மதிப்பில் இரயுமன்துறை முதல் நீரோடி வரையிலான மீனவ கிராம இணைப்புச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கடலரிப்பினால் இச் சாலை பாதிக்கப்படாத வகையில் பல்வேறு பகுதிகளில் கடல்அரிப்பு தடுப்புச் சுவா் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வள்ளவிளையில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அழகுமீனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் இப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
