குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு வழிவிட்டபோது சாலையோரமாக இருந்த குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள கரவிளாகத்தைச் சோ்ந்தவா் பாபு (45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனா். பாபு சனிக்கிழமை மாலை ஆட்டோவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
சென்னித்தோட்டம் அருகே வண்ணான்குளத்தின் கரையோரமாக சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்துக்கு வழிவிடுவதற்காக ஆட்டோவை கரையோரம் பாபு திருப்பியுள்ளாா்.
அப்போது எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி குளத்துக்குள் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோவிலிருந்து வெளியே வர முடியாமல் பாபு நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் பாபுவின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோ மீட்கப்பட்டது. மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

