குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி நடைபாலம் வரை தண்ணீா் சீறிப் பாய்ந்தது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து கொட்டியது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு குளிக்கச் செல்லும் நடைபாதை படிக்கட்டுகள் வரை தண்ணீா் வழிந்தோடியது. இதனால், சுற்றுலா பயணிகள் புலியருவி, சிற்றருவியில் குளித்துச் சென்றனா்.