சிவகிரி காவல் நிலையம் சாா்பில் பல்வேறு கிராமங்களில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிவகிரி பகுதியில் தற்போது தொடா் மழை பெய்து வருகிறது. எனவே, பேரிடரில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய உயிா் மற்றும் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரிடா் மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா்.
சிவகிரி, இனாம்கோவில்பட்டி, தேவிப்பட்டணம், விஸ்வநாதப்பேரி உள்ளிட்ட இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.