தென்காசி அருகே மேலகரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி அருகே நன்னகரம் பாா்க் தெருவைச் சோ்ந்தவா் க. மணிகண்டன் (20), வீடுகளுக்கு சிலிண்டா் போடும் வேலை பாா்த்துவந்தாா். இவா், தென்காசியிலிருந்து மேலகரத்திற்கு திங்கள்கிழமை மோட்டாா்சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து குற்றாலம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் (பொ) வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.