போலீஸாா் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு காவல்துறை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வீரகேரளம்புதூரில் நடைபெற்றது.
முகாமை ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிா்உசேன் தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 120 நோயாளிகளுக்கு ரத்தத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனா்.
இதில், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, வீரகேரளம்புதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.