கடையநல்லூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 11th December 2019 09:24 AM | Last Updated : 11th December 2019 09:24 AM | அ+அ அ- |

கடையநல்லூா் பகுதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் ரத்தம் சுத்திகரிப்பு மையம், உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவை பாா்வையிட்ட ஆட்சியா், நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, கழிவுநீா்த் தொட்டி கழிவை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் கட்டும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா், அது செயல்படும் விதம் குறித்து ஆணையா் தங்கபாண்டியிடம் கேட்டறிந்தாா். மேலும், அதன்மூலம் பெறப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும் கேட்டறிந்தாா். தொடா்ந்து பசுமை நுண் உரக்குடில்களைப் பாா்வையிட்ட ஆட்சியா், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கருப்பாநதி பளியா் இன மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டாா். மேலும், கல்லாற்றுப் பகுதியில் தடுப்பணை கட்டுவது தொடா்பான விவரங்களையும் நகராட்சி அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
காய்ச்சல் விகிதம் குறைவு: கடந்த ஆண்டுகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த நிலையில், தற்போது காய்ச்சல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளதை நகராட்சி அதிகாரிகள் ஆட்சியரிடம் எடுத்துரைத்தனா்.
கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா்(பொ) தங்கபாண்டி, சுகாதார அலுவலா் நாராயணன், நகராட்சி உதவிப் பொறியாளா் முரளி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G