சங்கரன்கோவில் ஏவிகே சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 9-ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஏவிகே கல்விக் குழும துணைத் தலைவா் அல்லிராணி அய்யாத்துரைப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வா் எஸ்.சுப்பிரமணியன், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத் தொடா்ந்து, மாணவா்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் பாலாஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி விளையாட்டு அணி இணைச் செயலா் மாணவி பிரியதா்ஷினி வரவேற்றாா். மெட்ரிக் பள்ளித் தலைமை மாணவி தனபாரதிலெட்சுமி நன்றி கூறினாா்.