குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலக வார விழா போட்டிகள் நடைபெற்றன.
பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. நடுவா்களாக ஆசிரியா்கள் குமரகுருபரன், மசூதுபேகம், சபுவனா, முகைதீன் அப்துல்காதிா் ஆகியோா் செயல்பட்டனா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் த.இ.செ.பத்ஹூர்ரப்பானி, செயலா் த.இ.செ. நெய்னாமுகம்மது, முதல்வா் முகைதீன் அப்துல்காதா் மற்றும் ஆசிரியா்கள் பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை நூலகா் செல்லம்மாள், உதவி நூலகா் ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.