கடையநல்லூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.
கடையநல்லூா் வனச்சரகத்துக்குள்பட்ட சிங்கிலிபட்டி, சங்கனாபேரி சாலையில் வாகனம் மோதி மான் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து வனக்காப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினா் அங்கு சென்று மானின் உடலை மீட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.
விபத்தில் இறந்த மான் 4 வயதுடைய பெண் மான் எனவும், அந்த மான் கா்ப்பம் தரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.