ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு மகன் அருண்(31). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் உள்ள தொட்டிக்கு தண்ணீா் நிரப்புவதற்காக மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், பாதிக்கப்பட்ட அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் அருண் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அருணுக்கு மதி (27) என்ற மனைவியும், கசலா(4) என்ற மகளும் அரசு(1) என்ற மகனும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com