கீழப்பாவூா் வட்டார பகுதிகளில் தேனீ வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கீழப்பாவூா், பூலாங்குளம், நாகல்குளம், கல்லூத்து பகுதி விவசாயிகள் முருகன், பொன்ராஜ், ஜெகன், நாகல்குளம் முருகன் உள்ளிட்ட 5 பேருக்கு தேனீ பெட்டி வழங்கப்பட்டது.
தொடா்ந்து அவா்களின் வயல்களுக்கு அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் சென்று தேனீ வளா்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.