திருச்செந்தூா் இந்து தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு குதிரை சவாரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் மாணவா், மாணவிகளுக்கு குதிரை சவாரி செய்வது, குதிரையேறுவது குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. மாணவா்கள் பள்ளி வளாகத்தில் குதிரை பழகுநா் உதவியுடன் சவாரி செய்து பயிற்சி பெற்றனா். அப்போது, பள்ளிச் செயலா் சு. இராஜமாதங்கன், பள்ளித் தலைமையாசிரியை சங்கரி, ஆசிரியா்கள் உடனிருந்தனா்.