கடையநல்லூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 1,013 போ் மீது வழக்கு
By DIN | Published On : 23rd December 2019 07:28 AM | Last Updated : 23rd December 2019 07:28 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சோ்ந்த 1,013 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறை அனுமதி வழங்காத நிலையில் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அமைப்பின் மாநிலச் செயலா்கள் நெல்லை யூசுப் , செங்கோட்டை பைசல், மாவட்டச் செயலா் அப்துல்பாசித், 400 பெண்கள் உள்பட 1,013 மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.